search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு உற்பத்தி"

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

    தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.
    • மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று 14 தேதி 11 செ.மீ மி.மீட்டா் மழையும், இன்று காலை 8 மணி வரை 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன் பள்ளி கோடியக்காடு கடிநெல் வயல் ஆகிய பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரே நாளில் 11 சென்டிமீட்டர் மழை பெய்ததால் உப்பள பகுதியில் கடல் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி கடந்த வாரம் வரை நடைபெற்ற உப்பு உற்பத்தி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இனி மழை காலம் முடிந்து பிப்ரவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்ற 10 ஆயிரம் தொழிலாளர்களும் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். தொடர்ந்து விட்டு விட்டுமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவ தால் உப்பு உற்பத்தி அதி கரித்துள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாட்டு உப்பு நிறுவனம் வாலிநோக்கம் பகுதியிலும், தனியார் உப்பு உற்பத்தி நிறு வனங்கள் மூலம் திருப்புல்லாணி, தேவிபட்டினம், நதிப்பாலம், கோப்பேரிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.உப்பு உற்பத்தி காலம் வட கிழக்கு பருவமழை முடிந்த பின் மார்ச் முதல் அக் டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும்.

    உப்பளங்களில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழை காலங்களில் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதி கரித்து இருப்பதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    ராமநாதபும் மாவட்டத்தில் ஒரு சீசனில் 2.5 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். உப்பு உற்பத்தியில் மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் 29 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தற்போது வெப்பம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தியும் அதிக ரித்திருப்பதால் உற்பத்தி யாளர்களும், உப்பள தொழிலாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    தற்போது உப்பளங்களில் உப்பு மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. டன் உப்பு சில மாதங்களுக்கு முன் வரை டன் ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ 1200 முதல் ரூ 1600 வரை விற்பனை ஆகிறது. தற்போதுள்ள விலைவாசி மற்றும் கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட வைகளுடன் ஒப்பிடுகையில் இந்த விலை போதுமானதாக இல்லை. ஒரு டன் ரூ.2000-த்திற்கு மேல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    சீசன் முடிய சில மாதங்களே உள்ள நிலை யில் உப்பளங்களில் தொழி லாளர்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை யில் சரிவு ஏற்பட்டுள்ளது உரிமையாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

    • பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, நதிப் பாலம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள உப்பளங்களில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழிற் சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. பொதுவாக பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலநிலையாக உள்ளது.

    தற்போது வெயில் சுட்டெரிப்பதால் உப்பள பாத்திகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மற்ற மாதங்களில் மழை காலம் என்பதால் காற்றின் ஈரப்பதத்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து திருப்புல்லாணி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பு விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு உப்பள உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது உப்பளங்களில் உப்பு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் உப்பு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது.

    சீசன் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உப்பளங்களில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையிலும் உப்பின் விலை உயர்ந்துள்ளதால் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவைவிட இந்தாண்டு பாதி அளவு தான் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.
    • மழைநீர் வடிந்த பின்னர் உப்பு உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இப்பகுதியில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும். ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு மிகவும் உகந்த காலமாகும்.

    இந்நிலையில் இந்தாண்டு அவ்வப்போது பெய்த மழை மற்றும் சரியாக வீசாத மேல்திசை காற்று போன்ற காரணங்களால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    இந்தாண்டு ஆடி மாதம் தொடக்கமான ஜூலை 17-ந்தேதியில் இருந்தே அவ்வப்போது மழை பெய்துள்ளது. மேலும் ஆடி மாதத்தில் வழக்கமாக வீசும் மேல்திசை காற்றும் இந்தாண்டு சரியாக வீசவில்லை. இதனால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.

    ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவைவிட இந்தாண்டு பாதி அளவு தான் உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை 50 சதவீதம் அதாவது 12.5 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.

    அக்டோபர் முதல் வாரம் அதாவது இன்னும் 5 வாரங்கள் தான் உப்பு உற்பத்திக்கான காலம் உள்ளது. தற்போது மழைநீர் உப்பளங்களில் தேங்கி உள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிந்த பின்னர் உப்பு உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும். உற்பத்தி குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை விலை போகிறது.

    நல்ல விலை இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆனால் பெரிய அளவில் லாபம் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மரக்காணத்தில் உப்பு உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
    • மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வந்தது இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்தது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 5000 தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

    • தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடமாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்சமயம் ஒரு டன் உப்பு தரத்திற்கேற்ப ரூ.2500 வரை விற்பனையாகிறது. கடந்த மாதங்களில் மழை அடிக்கடி பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்சமயம் உப்பு உற்பத்திக்கு சூழ்நிலை சாதகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    ×